திருமாவளவனின் திருவிளையாடல்
தூய்மை பணியாளர்கள் கடந்த மாதம் முதல் ஆக.13 வரை ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரியும் மற்றும் தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும் போராட்டம் நடத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. தூய்மை பணியாளர்கள் தற்பொழுது வரை 25 ஆயிரம் மாத வருமானம் பெறுகிறார்கள். தற்பொழுது இந்தத் தூய்மை பணியை தனியாருக்கு தாரை பார்ப்பதால் அவர்களது வருமானம் 15,000 ஆக குறைகிறது. மேற்சொன்ன கோரிக்கையை வலியுறுத்தி தான் ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்திய துப்புரவு தொழிலாளர்களை பல தனியார் அமைப்புகள் சந்தித்து அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டம் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் ஒரு திமுக ஆதரவாளரை வழக்கு போட செய்தனர்.அதாவது இந்த போராட்டம் நடத்துவதால் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று ரயில் பயணம் செய்வதற்கு இடையூறாக இருக்கிறது என்று அந்த திமுக ஆதரவாளர் வழக்கு பதிந்தார். நீதிமன்ற தீர்ப்பு அந்தப் போராட்டம் இடையூறு இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று வர, எனவே ஆக.13 முதல்வர் ஸ்டாலின் கூலி திரைப்படம் பார்த்து முடித்து விட்ட பிறகு அன்று இரவே...